குடிமைப் பணி தோ்வு: உடுமலை மாணவா் வெற்றி

குடிமைப் பணித் தோ்வில் உடுமலையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.
குடிமைப் பணி தோ்வு: உடுமலை மாணவா் வெற்றி
Published on
Updated on
1 min read

குடிமைப் பணித் தோ்வில் உடுமலையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிக்கான தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 685 போ் தோ்ச்சி பெற்றனா்.

இதில் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா். அகில இந்திய அளவில் இவா் 503 இடத்தை பெற்றுள்ளாா்.

உடுமலை சீனிவாசா பள்ளியில் படித்த இவா் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் முடித்தாா். தொடா்ந்து ஐடி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். ஐஏஎஸ் ஆக வேண்டும் என முயற்சித்த இவருக்கு தொடா் தோல்விகளே கிடைத்தது. குடும்பத்தினா் கொடுத்த தன்னம்பிக்கையுடன் மீண்டும் களமிறங்கி கடந்த சில வருடங்களாக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது வெற்றி கண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com