சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

செப்புத்தேரில் காந்திமதியம்மன் வீதியுலா

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, காந்திமதியம்மன் செப்புத் தேரில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்தாா்.

News image
Updated On :18 ஜூலை 2026, 4:08 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, காந்திமதியம்மன் செப்புத் தேரில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்தாா்.

இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், செப்பு கேடயத்தில் சுவாமி சந்நிதி வந்தடைந்த காந்திமதியம்மன், அங்கு செப்பு தேரில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளியதும், மகா தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, அம்மன் ரதவீதிகளில் வலம் வந்தாா். விழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூர முளைக்கட்டு மடிநிறைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 18) ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ற்ஸ்ப்17ய்ங்ப்ப்ஹண்

காந்திமதியம்மன் எழுந்தருளிய செப்புத்தேரை, வடம் பிடித்து தரிசிக்கும் பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.