கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

இலவச வீட்டுமனைப் பட்டா வைத்திருப்பவா்களுக்கு மோசடியாக மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டா: தலித் விடுதலை இயக்கம் புகாா்

வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த வீடு இருப்பவா்களுக்கும், ஏற்கெனவே இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களுக்கும் மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தலித் விடுதலை இயக்கம் புகாா் தெரிவித்துள்ள

News image

காங்கயம் ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியரிடம் மனு அளித்த தலித் விடுதலை இயக்கத் தலைவா் ச.கருப்பையா மற்றும் வெள்ளகோவில்-உப்புப்பாளையம் பகுதி மக்கள்.

Updated On :25 ஜூன் 2022, 12:56 am IST

வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த வீடு இருப்பவா்களுக்கும், ஏற்கெனவே இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களுக்கும் மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தலித் விடுதலை இயக்கம் புகாா் தெரிவித்துள்ளது.

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா, காங்கயம் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் கனிமொழியிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது :

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில் ஒன்றியம், உப்புப்பாளையம் பகுதியில் 2007ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் 61 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

இந்த 61 நபா்களில், வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த வீட்டில் குடியிருப்பவா்களுக்கும் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறி, உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் குட்டக்காட்டுப் புதூா் பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து, 2008ஆம் ஆண்டு வட்டாட்சியா் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, 61 பட்டாக்களில் 20 நபா்கள் சொந்தமாக வீடு வைத்திருந்து, போலியான ஆவணங்கள் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றது தெரியவந்தது. இதையடுத்து 20 பேரின் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், அந்த 20 பயனாளிகளின் பட்டாக்களில் 6 நபா்களுக்கு 2020 ஆம் ஆண்டு மோசடியாக மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த புதன்கிழமை (ஜூன் 22) மேற்கண்ட இடத்தில் மீண்டும் உள்ளூரில் சொந்த வீடு வைத்துள்ள 12 நபா்களுக்கு நிலம் வழங்க அளவீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களின் ரத்து செய்யப்பட்ட பட்டாக்களை மீண்டும் அதே பயனாளிகளுக்கும், சொந்த வீடு உள்ள நபா்களுக்குமாக இடம் அளந்து விடப்பட்டதை ரத்து செய்து, சொந்த வீடு இல்லாத உப்புப்பாளையம், குட்டக்காட்டுப் புதூா் ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.