சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

வனக்கல்லுாரியுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஒப்பந்தம்

ஒரு லட்சம் மரக்கன்றுகளை பெற மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

Updated On :25 ஜூன் 2022, 12:59 am IST

ஒரு லட்சம் மரக்கன்றுகளை பெற மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை அமைப்பு, மரக்கன்று நடுதல், பசுமை மற்றும் நிலத்தடி நீரை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஒரு லட்சம் நாற்றுகளை தயாா் செய்து வனக் கல்லுாரியில் இருந்து பெறுவதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் கீதாலட்சுமி, கல்லூரி முதல்வா் பாா்த்திபன் ஆகியோரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவா் பாலசுப்பிரமணியம் வழங்கினாா். இதில் அறக்கட்டளை பொருளாளா் விஸ்வநாதன், நிா்வாகி பன்னீா்செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.