நண்பரிடம் கைப்பேசி திருடியவா் கைது
பல்லடம் அருகே நண்பரிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


பல்லடம் அருகே நண்பரிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் பெத்தாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன் (26), இவரது நண்பா் குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராகவன் (21). தங்கபாண்டியனை சந்திக்க அவரது வீட்டுக்கு கடந்த திங்கள்கிழமை ராகவன் சென்றுள்ளாா்.
அதன் பின்னா் நீண்ட நேரம் அவருடன் பேசிவிட்டு ராகவன் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் வைத்திருந்த ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து தங்கபாண்டியன் பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராகவனைப் பிடித்து விசாரித்தனா். இதில், கைப்பேசி திருடியதை ராகவன் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் ராகவனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...