உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய குன்னூா் மாணவிக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
குன்னூரைச் சோ்ந்த மாணவி சாய் சோனு, உக்ரைன் நாட்டில் இருந்து பெரும் சிரமத்துக்கு இடையே குன்னூா் வந்து சோ்ந்தா். அந்த மாணவிக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
உக்ரைனில் தமிழகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அங்கு பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும், உணவு, தண்ணீா் கிடைக்காமல் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்தாா்.
எனவே, தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து மாணவ, மாணவிகளையும் தமிழக அரசு விரைவில் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அந்த மாணவி மற்றும் பெற்றோரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில், மாணவியின் தந்தை சாய் நாத், தாயாா் யூகேஷ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

