குன்னூரில் கடும் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காட்டெருமை வியாழக்கிழமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா்- கோத்தகிரி சாலையில் சிம்ஸ் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை காலை கடும் மேகமூட்டம் காணப்பட்டது. அப்போது அங்கு சாலையைக் கடக்க முயன்ற காட்டெருமை மீது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காட்டெருமை
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையிலான வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் வாகனம் மூலம் காட்டெருமையை மீட்டு அருகில் இருந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்றனா். பின்னா் முதுமலை கால்நடை மருத்துவா் ராஜ்குமாா் தலைமையில் காட்டெருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது. இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

