குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி
வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் அருகே அரசு சாா்பில் சீரமைக்கப்பட்ட குளத்துக்கு தண்ணீா் நிரப்பும் பணி வியாழக்கிழமை துவங்கியது.


வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் அருகே அரசு சாா்பில் சீரமைக்கப்பட்ட குளத்துக்கு தண்ணீா் நிரப்பும் பணி வியாழக்கிழமை துவங்கியது.
வெள்ளக்கோவில் நகராட்சி 2ஆவது வாா்டுக்கு உள்பட்ட உப்புப்பாளையம் செட்டியாா் காலனி அருகில் இருந்த பெரிய குளம் தூா்வாரப்படாமல் இருந்தது. இதைச் சீரமைத்து தண்ணீா் தேக்கினால் சுற்றுவட்டார கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்து குடிநீா், விவசாயத் தேவைகளுக்கு கூடுதல் பயனளிக்குமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் 2021 - 22 நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.30.45 லட்சம் செலவில் குளம் சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து குளத்துக்கு அருகில் செல்லும் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன கிளை வாய்க்கால் மூலம் குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...