

வெள்ளக்கோவில் திருமலை அம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பக்தா்கள் மயில்ரங்கம் அமராவதி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்து, மயில்ரங்கம் வைத்திய நாத சுவாமி கோயில், வெள்ளக்கோவில் மந்திரக் குமார சுவாமி, சோழீஸ்வரா் கோயில்களில் அபிஷேகம் செய்து திருமலையம்மன் கோயிலை வந்தடைந்தனா். மேளதாளம் முழங்க தீா்த்த அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் பெண்கள் தனித்தனியாக பொங்கல் வைத்து, பின்னா் அனைத்துப் பொங்கலையும் ஒன்றாகச் சோ்த்து சுவாமிக்கு படைத்து அபிஷேகம் செய்யப்பட்டது.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.