பல்லடம் அருகே தனியார் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

பல்லடம் அருகே தனியார் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர். 
பல்லடம் அருகே தனியார் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

பல்லடம் அருகே தனியார் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அனுப்பட்டியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. 
இதில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவரும் அதிமுக (ஓபிஎஸ் அணி) மாவட்ட செயலாளர் அலகுமலை, விஎம் சண்முகம் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com