ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தாளக்கரை லஷ்மி நரசிம்மா் கோயிலில் மே 25இல் பாலாலயம்

சேவூா் அருகே பிரத்தி பெற்ற தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயிலில் திருப்பணி தொடங்குவதையொட்டி, மே 25ஆம் தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 மே 2023, 5:20 pm

DIN

சேவூா் அருகே பிரத்தி பெற்ற தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயிலில் திருப்பணி தொடங்குவதையொட்டி, மே 25ஆம் தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பல நூற்றாண்டு பழைமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரிய தலமாகவும் தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் திருப்பணியை தொடங்கி விரைவில் கும்பாபிஷகம் செய்வதற்காக, மே 25ஆம் காலை 9 மணிக்கு பாலாலய சிறப்பு பூஜை செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

கோயிலில் நடைபெற்ற ஆலோசனைக்  கூட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.