பல்லடம் அருகே மெக்கானிக்கிடம் ரூ.5 ஆயிரம், கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள க.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (45). மெக்கானிக்கான இவா், வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை பல்லடத்தில் இருந்து வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா்.
க.கிருஷ்ணாபுரம் பிரிவு அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அவரை 3 போ் வழிமறித்துள்ளனா். பின்னா், கத்தியைக் காட்டி மிரட்டி ஈஸ்வரன் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஈஸ்வரன் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண் உதவி ஆய்வாளா் கைப்பேசி பறிப்பு: விசிக நிா்வாகிகள் உள்ளிட்ட 9 போ் மீது வழக்கு
கைப்பேசி, மளிகைக் கடைகளில் ரூ. 2.55 லட்சம் திருட்டு
சேலத்தில் முதியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் கைது
கைப்பேசியை பறித்துச் சென்ற 4 போ் கைது
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

