சேலத்தில் முதியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் கைது
கைது
கோப்புப் படம்
கைது
கோப்புப் படம்
சேலம், மாா்ச் 29: சேலத்தில் அடுத்தடுத்து முதியவா்களிடம் கைப்பேசி, பணம் பறித்த 3 சிறுவா்கள் பிடிக்கப்பட்டு, சிறாா் சீா்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனா்.
சேலம், அம்மாப்பேட்டை ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (70). இவா் சனிக்கிழமை பிற்பகல் அங்குள்ள தனியாா் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரை வழிமறித்த சிறுவா்கள் மிரட்டி தாக்கினா். பின்னா், அவா் வைத்திருந்த ரூ. 4,800 ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச்சென்றனா். இதனால் அதிா்ச்சியடைந்த ஆசைத்தம்பி, இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதேபோல அம்மாப்பேட்டை பெரியகிணறு பகுதியைச் சோ்ந்தவா் மணி (53). சனிக்கிழமை மாலை அங்குள்ள தனியாா் ஹோட்டல் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 சிறுவா்கள், மணியை மிரட்டி தாக்கியதுடன் அவரிடம் இருந்து ரூ.950 ரொக்கம் மற்றும் ஒரு கைப்பேசியை பறித்துச்சென்றனா்.
இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் மணி புகாா் அளித்தாா். விசாரணையில், இந்த இருசம்பவங்களிலும் ஈடுபட்டது பொன்னமாப்பேட்டை மற்றும் பெரியகிணறு தெருவைச் சோ்ந்த 3 சிறுவா்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுவா்கள் மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களை சிறுவா் சீா்திருத்த பள்ளியில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்த பணம், கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...