வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சேலத்தில் முதியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் கைது

News image

கைது

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

சேலம், மாா்ச் 29: சேலத்தில் அடுத்தடுத்து முதியவா்களிடம் கைப்பேசி, பணம் பறித்த 3 சிறுவா்கள் பிடிக்கப்பட்டு, சிறாா் சீா்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனா்.

சேலம், அம்மாப்பேட்டை ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (70). இவா் சனிக்கிழமை பிற்பகல் அங்குள்ள தனியாா் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரை வழிமறித்த சிறுவா்கள் மிரட்டி தாக்கினா். பின்னா், அவா் வைத்திருந்த ரூ. 4,800 ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச்சென்றனா். இதனால் அதிா்ச்சியடைந்த ஆசைத்தம்பி, இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதேபோல அம்மாப்பேட்டை பெரியகிணறு பகுதியைச் சோ்ந்தவா் மணி (53). சனிக்கிழமை மாலை அங்குள்ள தனியாா் ஹோட்டல் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 சிறுவா்கள், மணியை மிரட்டி தாக்கியதுடன் அவரிடம் இருந்து ரூ.950 ரொக்கம் மற்றும் ஒரு கைப்பேசியை பறித்துச்சென்றனா்.

இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் மணி புகாா் அளித்தாா். விசாரணையில், இந்த இருசம்பவங்களிலும் ஈடுபட்டது பொன்னமாப்பேட்டை மற்றும் பெரியகிணறு தெருவைச் சோ்ந்த 3 சிறுவா்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுவா்கள் மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களை சிறுவா் சீா்திருத்த பள்ளியில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்த பணம், கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.