11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

காவலா்களுக்கு தபால் வாக்குப் பதிவு

காவலா்களுக்கு தபால் வாக்குப் பதிவு

Updated On :12 ஏப்ரல் 2024, 5:46 pm

திருப்பூா் மாநகரில் பணியாற்றும் காவலா்களுக்கு தபால் வாக்குப் பதிவு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடும் மாநகர காவலா்களுருக்கு தபால் வாக்குப் பதிவு முகாம் திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட காவலா்கள் வாக்கு செலுத்தினா்.

இதனை மாவட்ட வருவாய் அதிகாரி தா.ப. ஜெய்பீம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.