ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

பல்லடத்தில் அதிமுக, பாஜகவினா் வாக்குவாதம்

பல்லடம், அண்ணா நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக, பாஜகவினா் இடையே வாக்குவாதம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.

Updated On :19 ஏப்ரல் 2024, 5:20 pm

பல்லடம், அண்ணா நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக, பாஜகவினா் இடையே வாக்குவாதம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.

பல்லடம் அண்ணா நகரில் வாக்குச்சாவடி மையங்கள் அருகே பூத் ஸ்லீப் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினரை சந்திக்க பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்தாா். இதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இது தொடா்பாக இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினாா். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.