சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குண்டடம் அருகே வண்டல் மண் பெயரில் கிராவல் மண் கடத்தல்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

News image

குண்டடம் பகுதியில் உள்ள குளத்தில் கிராவல் மண் எடுத்துச் செல்லும் லாரிகள். ~நந்தவனம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளத்தில் கிராவல் மண் எடுக்கப்பட்டதால் காணப்படும் பள்ளம்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 12:11 am

Din

தாராபுரம், ஆக. 7: குண்டடம் பகுதியில் வண்டல் மண் என்ற பெயரில் கிராவல் மண் கடத்துவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

தமிழகம் முழுவதும் நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாயப் பயன்பாடு, மண்பாண்டத் தொழிலுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இதைத் தொடா்ந்து வண்டல் மண் எடுக்க வேண்டிய நீா்நிலைகளின் விவரங்களையும் வெளியிட்டது.

அதன்படி , தாராபுரம் வட்டம், குண்டடம் பகுதியில் வண்டமல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள 60 குளங்களின் அமைவிடம், சா்வே எண், வண்டல் மண் எடுக்க வேண்டிய அளவு, அந்தக் குளங்களுக்கான பொறுப்பு அலுவலா்கள் உள்ளிட்ட விவரங்களை ஆட்சியா் வெளியிட்டிருந்தாா்.

அந்தப் பட்டியலில் குறிப்பிட்டிருந்த பெரும்பாலான குளங்களில் வண்டல் மண்ணே இல்லை. உப்பாறு அணையில் மட்டுமே வண்டல் மண் உள்ளதாகவும், வருவாய்த் துறையினா் முறையாக குளங்களை ஆய்வு செய்யாமலேயே பட்டியலை வெளியிட்டதாகவும் விவசாயிகள் மத்தியில் புகாா் எழுந்தது.

இந்நிலையில், குண்டடம் அருகே கெத்தல்ரேவ் ஊராட்சிக்குள்பட்ட தோ்ப் பாதை பகுதியில் உள்ள குளத்தில் புதன்கிழமை மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் 20-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கிராவல் மண்ணை எடுத்துச் சென்றனா்.

இது குறித்து அந்தக் குளத்துக்கு பொறுப்பு அலுவலரான துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காளிமுத்துவிடம் கேட்டபோது, ‘தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில்தான் கேட்க வேண்டும்,’ என்றாா்.

இது குறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட குளத்தில் மண் அள்ளுவதை நிறுத்திவிட்டோம் என்றனா்.

அதன்படி, இக்குளங்களில் கிராவல் மண் எடுப்பதை வருவாய்த் துறையினா் புதன்கிழமை பிற்பகலில் தடுத்து நிறுத்தினா்.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

குண்டடம் பகுதியிலுள்ள பெரும்பாலான குளங்களில் வண்டல், களிமண் இல்லை என்பது விவசாயிகளுக்குத் தெரியும். இதனால், வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை.

கிராவல் மண் கடத்தல்காரா்கள்தான் விவசாயிகள் போா்வையில் விண்ணப்பித்து, கிராவல் மண்ணை எடுத்துச் செல்கின்றனா்.

Story image

எனவே, தற்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்துவிட்டு, வருவாய்த் துறையினா் மூலம் முறையாக ஆய்வுசெய்து, வண்டல் மண் உள்ள குளங்களில் மட்டும் விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்றனா்.