ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 12:21 am

Din

பல்லடம், ஆக. 7: ‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் புதன்கிழமை கூறியதாவது:

கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்க உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத ‘கள்’ விற்பனைக்கு உரிய வழிகாட்டி வழிமுறைகளை வகுத்து கள்ளுக்கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஏபி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு முன்பு வாய்க்கால்களை தூா்வார வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மானிய விலையில் வைக்கோல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க தோ்தலை அரசு உடனே நடத்த வேண்டும் என்றாா்.