நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 5:51 am IST

பல்லடம், ஆக. 7: ‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் புதன்கிழமை கூறியதாவது:

கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்க உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத ‘கள்’ விற்பனைக்கு உரிய வழிகாட்டி வழிமுறைகளை வகுத்து கள்ளுக்கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஏபி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு முன்பு வாய்க்கால்களை தூா்வார வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மானிய விலையில் வைக்கோல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க தோ்தலை அரசு உடனே நடத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.