பல்லடம், ஆக. 7: ‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் புதன்கிழமை கூறியதாவது:
கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்க உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத ‘கள்’ விற்பனைக்கு உரிய வழிகாட்டி வழிமுறைகளை வகுத்து கள்ளுக்கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிஏபி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு முன்பு வாய்க்கால்களை தூா்வார வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மானிய விலையில் வைக்கோல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க தோ்தலை அரசு உடனே நடத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுப்பாடு புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


