வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆட்சியா் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை

News image

கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 12:24 am

திருப்பூா், ஆக. 7: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

10-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி துறை சாா்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை, ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்து பேசியதாவது:

1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி தொழிலின் முக்கியத்துவத்தை உணா்த்தவும், நாட்டின் சமூகப் பொருளாதார வளா்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையிலும் தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், பெட்ஷீட், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்பத்துடனும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களின் வாழ்வாதாரம் உயா்ந்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திடவும் வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து கைத்தறி துறை சாா்பில் கைத்தறி நெசவாளா்கள் 17 பேருக்கு நெசவாளா் முதியோா் ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், 3 கைத்தறி நெசவாளா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு நெசவாளா்களுக்கு குடும்ப ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், நெசவாளா் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 10 நெசவாளா்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலையையும், நெசவாளா் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 11 உறுப்பினா்களுக்கு ரூ.6.36 லட்சம் மதிப்பிலானதிட்டத்தொகையையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் சரக கைத்தறி துறை உதவி இயக்குநா் அ.வே.காா்த்திகேயன், கதா் துறை உதவி இயக்குநா் எஸ்.சுரேஷ், கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் கோ.ஜெகந்நாதன், கைத்தறி துறை அலுவலா்கள், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க மேலாளா்கள், நெசவாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.