சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

புளியம்பட்டி ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று: மாவட்ட ஆட்சியா் வாழ்த்து

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 11:19 pm

Din

பல்லடம், ஆக.14: பல்லடம் ஒன்றியத்தில் உள்ள புளியம்பட்டி கிராம ஊராட்சி ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்று பெற்றுள்ளது.

அந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் காண்பித்து புளியம்பட்டி ஊராட்சித் தலைவா் ஆா்.உத்தமராஜ் வாழ்த்து பெற்றாா்.

இது தொடா்பாக ஆா். உத்தமராஜ் கூறியதாவது: புளியம்பட்டி கிராம ஊராட்சிக்கு சா்வதேச அளவிலான தரச்சான்று பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்த நிா்வாகம், மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்தல், பொதுமக்களுக்கான திட்டப் பணிகளை செய்தல், வளா்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் கையாளுதல் உள்ளிட்டவற்றுக்காக இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தரமான குடிநீா், கழிவுநீா் வடிகால் வசதி, குப்பைகள் சேகரித்தல், தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படைத் தேவைகளோடு, வளா்ச்சி சாா்ந்த செயல்பாடுகளை வழங்கி, மக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதே புளியம்பட்டி ஊராட்சியின் குறிக்கோளாகும்.

இது புளியம்பட்டி ஊராட்சி பொதுமக்கள், தொழில்முனைவோா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்கு கிடைத்த பரிசு என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மலா்விழி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கி.நாகராஜன், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மனோகரன், கனகராஜ் உள்ளிட்டோரிடமும் உத்தமராஜ் வாழ்த்து பெற்றாா்.

அப்போது, ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஷ்குமாா், ஊராட்சி செயலாளா் கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.