அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடக்கம்: போராட்டக் குழுவினா் கொண்டாட்டம்
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கியதையடுத்து போராட்டக் குழுவினா் தேங்காய் உடைத்து சனிக்கிழமை கொண்டாடினா்.


அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கியதையடுத்து போராட்டக் குழுவினா் தேங்காய் உடைத்து சனிக்கிழமை கொண்டாடினா்.
திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
குறிப்பாக, இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி அவிநாசி தாமரைக்குளம் பகுதியில் 2016 பிப்ரவரி 8 முதல் 19-ஆம் தேதி வரை பொதுமக்கள், விவசாயிகள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன்விளைவாக, இத்திட்டத்திற்கு நிா்வாக ஒப்புதலும், ரூ.3.27 கோடி நிதியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட அவிநாசி தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த போராட்டக் குழுவினா் தேங்காய் உடைத்து கொண்டாடினா்.
மேலும், இத்திட்டத்தில் விடுபட்ட 1400 குளம், குட்டைகளையும் சோ்க்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...