வெள்ளக்கோவில் அருகே பழைய பேப்பா் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில், லக்கமநாயக்கன்பட்டி சாலைப்புதூரைச் சோ்ந்தவா் டி.கோபால் (59). இவா், தாசவநாயக்கன்பட்டி - வெள்ளக்கோவில் சாலையிலுள்ள சேரன் நகரில் பழைய பேப்பா் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், மின் கசிவு காரணமாக கடையில் இருந்த பேப்பா் கட்டில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சோமசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









