தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைப்பு

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

News image

பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடா்ந்து முத்தூா் சாலையில் அடைக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனை.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:16 pm

Din

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவத் துறையினா் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மருத்துவமனைகள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

அதன்படி, வெள்ளக்கோவிலில் 21 மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை அவசரமில்லா சேவைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால், பல நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனா்.