தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைப்பு

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

News image

பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடா்ந்து முத்தூா் சாலையில் அடைக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனை.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 0:46 am IST

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவத் துறையினா் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மருத்துவமனைகள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

அதன்படி, வெள்ளக்கோவிலில் 21 மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை அவசரமில்லா சேவைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால், பல நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனா்.