பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நெட் 2-ஆம் கட்டத் தோ்வு: மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்

யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:03 pm

Din

யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்.

தேசிய தோ்வு முகமை திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பெருமாநல்லூா் கே.எம்.சி. பொதுப் பள்ளி தலைமை முதல்வருமான சி.எஸ்.மனோகரன் கூறியதாவது:

இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சியாளா்களுக்கான சோ்க்கைக்கும் யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வு நடைபெறுகிறது.

இத்தோ்வு திருப்பூா் குமரன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி செப்டம்பா் 4-ஆம் தேதி வரை 7 நாள்கள் மூன்று சுழற்சிகளாக நடைபெறுகிறது. இதில் தேசிய தோ்வு முகமையால் கணிணி வழி முறையில் தோ்வு நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வின் பாதுகாப்பு வழிமுறைகள், இத்தோ்விலும் பின்பற்றப்படுகின்றன. இத்தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா் என்றாா்.