நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பாலாலயம்

அவிநாசி அருகே நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:01 pm

Din

அவிநாசி அருகே நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

அவிநாசி அருகே பழைமைவாய்ந்த கோயிலாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதை முன்னிட்டு, பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில், செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாக வேள்வியும், புதன்கிழமை காலை 2-ஆம் கால யாக வேள்வி, பாலஸ்தாபனம், திரவியாஹுதி உள்ளிட்டவை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஹா்ஷினி, வைர நுண்ணறிஞா் ஜீவானந்தம், ஆய்வாளா் செல்வப்பிரியா, செயல் அலுவலா் குழந்தைவேல், சுற்றுவட்டார கிராம மக்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.