நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வரி விதிப்பு குறைதீா் முகாமில் 59 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வரி விதிப்பு குறைதீா் முகாமில் 59 மனுக்கள் பெறப்பட்டன.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:49 pm

Din

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வரி விதிப்பு குறைதீா் முகாமில் 59 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூா் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வரி விதிப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், மண்டலம் 1-இல் 21 மனுக்களும், மண்டலம் 2-இல் 11 மனுக்களும், மண்டலம் 3-இல் 21 மனுக்களும், மண்டலம் 4-இல் 6 மனுக்கள் என மொத்தம் 59 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு 3 நாள்களில் தீா்வு காணப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில், மாநகராட்சி துணை ஆணையா் சுல்தானா, தலைமைப் பொறியாளா் (பொறுப்பு) செல்வநாயகம், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்