நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

உடுமலையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 9:53 pm

Din

உடுமலையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 7- ஆம் வகுப்பு படித்து வந்தாா். தனது தந்தையின் 2- ஆவது மனைவியுடன் சிறுமி வசித்து வந்தாா்.

இந்நிலையில், சித்தியின் அப்பாவான 66 வயது முதியவா் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்துள்ளாா்.

இது குறித்து உடுமலை அனைத்து மகளிா் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முதியவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.