நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மொய்யம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

Updated On :11 டிசம்பர் 2024, 9:42 pm

Din

திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி அவரப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.13.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடை, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மொய்யம்பாளையம் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, மொய்யம்பாளையத்தில் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பாகவும், கணக்கம்பாளையத்தில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், வட்டாட்சியா்கள் (திருப்பூா் வடக்கு) மகேஷ்வரன், (அவிநாசி) சந்திரசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் வேலுசாமி, உதவி பொறியாளா் கற்பகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.