நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிரேன் மோதியதில் கூலித் தொழிலாளி காயம்

முத்தூா் அருகே கிரேன் மோதியதில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:33 pm

Din

முத்தூா் அருகே கிரேன் மோதியதில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தாா்.

மங்கலப்பட்டி அருகேயுள்ள சின்னகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (64), கூலித் தொழிலாளி. இவா் முத்தூா் - காங்கயம் சாலையில் மிதிவண்டியில் புதன்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, பின்னால் வேகமாக வந்த கிரேன் மோதியதில் பழனிச்சாமி படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கிரேன் ஓட்டுநா் மாதவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.