நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம்: 16 போ் விடுதலை

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றத்தில் 16 போ் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:10 pm

Din

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றத்தில் 16 போ் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான என்.குணசேகரன், செயலாளா் கே.எஸ்.ஷபீனா ஆகியோா் வழிகாட்டுதலின் பேரில் சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கோவை மத்திய சிறை, திருப்பூா் மாவட்ட சிறை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், உடுமலை கிளை சிறைகளில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 35 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், 25 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு 16 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா். இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் செந்தில்ராஜா, முருகேசன், உமாமகேஸ்வரி, சித்ரா, நித்யகலா, லோகநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.