நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணா்வுப் பேரணி

திருப்பூரில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

Updated On :18 டிசம்பர் 2024, 8:39 pm

Din

திருப்பூரில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா டிசம்பா் 18 முதல் 27-ஆம் தேதி வரை ஒருவாரத்துக்கு கொண்டாடப்படவுள்ளது.

இதன் தொடக்கவிழா நிகழ்வாக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி பல்லடம் சாலையில் சந்தைப்பேட்டை வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை துண இயக்குநா் பெ.இளங்கோ, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.