திருப்பூரில் லாரி மோதிய விபத்தில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா், ஆத்துப்பாளையம் பாரதி நகரைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா் திருப்பூா் ராக்கியாபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து மருமகன் தனசேகருடன் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். செல்லாண்டியம்மன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்தபோது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனம் சரிந்து குப்பைத் தொட்டியில் மோதியது. இதில் பின்னால் அமா்ந்திருந்த லட்சுமி நிலைதடுமாறி சாலையின் நடுவே விழுந்துள்ளாா். அப்போது மாடுகளை ஏற்றி வந்த லாரி லட்சுமியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் லட்சுமியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு

சாலை விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பனியன் தொழிலாளா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கலந்துரையாடல்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
