காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவகா் முன்னிலை வகித்தாா். காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சிப் பகுதியில் கோழி இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்துக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலை அமைந்தால் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதை ஏற்று சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி, ஒன்றியக் கவுன்சிலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம்

மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் பிரதமா் பேச்சு

பேரவை அதிமுக குழு தலைவா் யாா்? ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



