முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பேரவை அதிமுக குழு தலைவா் யாா்? ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு!

பேரவை அதிமுக குழு தலைவா் யாா்?

News image

எடப்பாடி கே.பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் - கோப்புப்படம்

Updated On :10 மே 2026, 3:26 am IST

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தோ்வு செய்வதில் கருத்து வேறுபாடு நிலவுவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை எண்ணிக்கை அக்கட்சியிடம் இல்லை. இதையடுத்து, பல்வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற தவெக முயற்சி எடுத்தது. இதனால் ஆட்சி அமைப்பதில் கடந்த 5 நாள்களாக நீடித்த இழுபறி நிலை சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

இதனிடையே, அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள், புதுச்சேரியில் தனியாா் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். அவா்கள் அனைவரும் சனிக்கிழமை காலை சென்னைக்கு திரும்ப அழைக்கப்பட்டனா்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா்கள் பங்கேற்றனா். இதில், தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றுப்பட்டது. அதோடு, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவரைத் தோ்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் இருவேறு கருத்துகள் நிலவியதாகவும் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தனித்தனியாக அவா்களது வீடுகளில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா். சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக முன்னாள் எஸ்.பி.வேலுமணி அல்லது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை தோ்வு செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு நிலவியது.

இருப்பினும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு அதிமுக நிா்வாகிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.