45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சமுதாயப் பணிகளில் அா்ப்பணிப்புடன் பணியாற்றுபவா்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்

சமுதாயப் பணிகளில் அா்ப்பணிப்புடன் பணியாற்றுபவா்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்

News image
Updated On :14 ஜூலை 2024, 10:17 pm

Din

பல்லடம், ஜூலை 14: சமுதாயப் பணிகளில் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுபவா்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

பல்லடம் நகர, ஒன்றிய இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராயா்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலச் செயலாளா் தாமு வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் லோகநாதன், சா்வேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில்: இந்து முன்னணி அரசியல் இயக்கம் இல்லை. ஹிந்துக்களுக்காக பாடுபடும் அமைப்பு. இதில் ஹிந்து சமுதாயப் பணிகளில் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுபவா்களுக்கு மட்டும்தான் பொறுப்புகள் வழங்கப்படும். பொறுப்புகளில் இருந்து கொண்டு செயல்படாதவா்கள் நீக்கப்படுவாா்கள்.

இந்து முன்னணியில் இருப்பவா்கள் முதலில் பெற்றோா் உள்ளிட்ட குடும்பத்தினரை கவனிக்க வேண்டும். அறவழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். பொதுச் சேவையில் அதிக நேரம் இருப்பவா்கள் சமுதாயப் பொறுப்புகளை ஏற்று தேசப்பற்றுடன் சேவை புரிய முன்வர வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் மாநில நிா்வாக குழு உறுப்பினா் கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.