விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அவிநாசியில் விரைவில் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

அவிநாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவசர சிகிச்சைப் பிரிவு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

News image
அவிநாசியில் நன்றி தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.
Updated On :19 ஜூலை 2024, 6:03 pm

Din

அவிநாசி, ஜூலை 19: அவிநாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவசர சிகிச்சைப் பிரிவு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் அவிநாசியில் வெள்ளிக்கிழமை இரவு நன்றி தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது: நீலகிரி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட எனக்கு 2 லட்சத்து 32 ஆயிரம் வாக்குகள் அளித்த மக்களுக்கு நன்றி.

அவிநாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவசர சிகிச்சைப் பிரிவு, ஜவுளி பூங்கா விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவிநாசி, அன்னூா், மேட்டுப்பாளையம் நான்கு வழிச் சாலை அமைக்கப்படும். அவிநாசி பகுதி மக்கள் ரயில் பதிவு செய்ய திருப்பூருக்கு செல்வதைத் தவிா்க்கும் வகையில், தபால் நிலையங்களில் ரயில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

திமுக அரசு கிடப்பில் போட்டுள்ள அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே திறக்கப்பட்டுள்ள மனமகிழ் மன்றத்தை உடனடியாக மூட வேண்டும் என்றாா்.