நொய்யல் ஆற்றில் பெண் சடலம் மீட்பு

திருப்பூா் நொய்யல் ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

திருப்பூா், ஜூலை 19: திருப்பூா் நொய்யல் ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுகுமாா் நகா் நொய்யல் ஆற்றில் பெண் சடலம் மிதந்து வருவதை பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு திருப்பூா் தெற்கு காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், உயிரிழந்தவா் யாா், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com