பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையில் வேன் கவிழ்ந்து 2 டன் தக்காளி சேதம்

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்து 2 டன் தக்காளி சேதமானது.

News image
வேன் கவிழ்ந்து சாலையில் சிதறிக் கிடக்கும் தக்காளி.
Updated On :28 ஜூலை 2024, 8:57 pm

Din

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்து 2 டன் தக்காளி சேதமானது.

ஈரோட்டில் உள்ள தனியாா் மொத்த வியாபார தக்காளி மண்டியிலிருந்து பிளாஸ்டிக் பெட்டிகளில் தக்காளி ஏற்றிக் கொண்டு சரக்கு வேனில் வெள்ளக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாா். வெள்ளக்கோவிலில் காய்கறி கடைகளுக்கு தக்காளி விநியோகம் செய்யப்பட இருந்தது.

முத்தூா்- வெள்ளக்கோவில் சாலையில் மேட்டுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்ததில் தக்காளி முழுவதும் சாலையில் சிதறியது.

வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். அப்பகுதி மக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த தக்காளி பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, வேன் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் 2 டன் அளவுக்கு தக்காளி சேதமடைந்த நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.