வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்து 2 டன் தக்காளி சேதமானது.
ஈரோட்டில் உள்ள தனியாா் மொத்த வியாபார தக்காளி மண்டியிலிருந்து பிளாஸ்டிக் பெட்டிகளில் தக்காளி ஏற்றிக் கொண்டு சரக்கு வேனில் வெள்ளக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாா். வெள்ளக்கோவிலில் காய்கறி கடைகளுக்கு தக்காளி விநியோகம் செய்யப்பட இருந்தது.
முத்தூா்- வெள்ளக்கோவில் சாலையில் மேட்டுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்ததில் தக்காளி முழுவதும் சாலையில் சிதறியது.
வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். அப்பகுதி மக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த தக்காளி பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, வேன் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் 2 டன் அளவுக்கு தக்காளி சேதமடைந்த நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


