பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தென்னந்தோப்பில் நுழைந்த யானைக் கூட்டம்: விவசாயிகள் அச்சம்

தென்னந்தோப்பில் நுழைந்த யானைக் கூட்டம்: விவசாயிகள் அச்சம்

News image

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்களை ஆய்வு செய்யும் வனத் துறையினா்.

Updated On :13 ஜூன் 2024, 9:58 pm

Din

உடுமலை, ஜூன் 13: உடுமலை அருகே தென்னந்தோப்பில் நுழைந்த யானைக் கூட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

உடுமலை மற்றும் அமராவதி வன எல்லைக்குள்பட்ட பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.

அப்பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் யானைகள் உணவு, குடிநீா் தேடி கூட்டம்கூட்டமாக வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், உடுமலையில் இருந்து சுமாா் 15 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வளையபாளையம் கிராமத்துக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அங்கிருந்த தென்னந்தோப்புகளுக்குள் நுழைந்து தென்னை மரங்களை நாசம் செய்தன. யானைகள் கூட்டத்தைக் கண்ட விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அமராவதி வனப் பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், யானைகள் குடியிருப்புகளை நோக்கி படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில், தென்னந்தோப்புகளுக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள், பல தென்னை மரங்களை நாசம் செய்துள்ளன. மேலும், மின் வேலிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

விடியவிடிய தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திவிட்டு வனத்துக்குள் சென்றுவிட்டன.

குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ரோந்து பணியைத் தீவிரமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில், சேதமடைந்த தென்னை மரங்களை உடுமலை வனத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.