ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

காங்கயத்தில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ

காங்கயத்தில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
தீயில் எரிந்து சேதமான ஆட்டோ.
Updated On :24 ஜூன் 2024, 10:38 pm

Din

காங்கயத்தில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காங்கயம், திருவிக நகரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் (57). பயணிகள் ஆட்டோ இயக்கி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு, ஆட்டோவை தனது வீட்டுக்கு முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பாா்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதைப் பாா்த்து, அதிா்ச்சியடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ஆட்டோவில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தாா். இது குறித்து முத்துக்கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.