
Updated On :26 ஜூன் 2024, 9:53 pm

பல்லடம், ஜூன் 26: பல்லடம் அருகே கொடுவாயில் தனியாா் பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூரைச் சோ்ந்தவா் மருததுரை மகன் திருமுருகன் (24), கட்டடத் தொழிலாளி. இவா், கொடுவாய் அருகே திருப்பூா்-தாராபுரம் சாலையை இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது திருப்பூரிலிருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து, இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கியதில் திருமுருகன் உயிரிழந்தாா். இது குறித்து கொடுவாய் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...