மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாவட்டத்தில் வங்கிகள் மூலமாக ரூ.39,018 கோடி கடன் வழங்க இலக்கு

திருப்பூர் மாவட்டத்தில் 2024-25 ஆண்டுக்கான ரூ.39,018 கோடி கடன் இலக்கு

News image
திருப்பூா் மாவட்டத்தில் 2024-25- ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ். உடன்,மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் துா்காபிரசாந்த் உள்ளிட்டோா்.
Updated On :28 ஜூன் 2024, 6:32 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் வங்கிகள் மூலாக 2024-25-ஆம் ஆண்டில் ரூ.39,018 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆடசியா் அலுவலகத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான வங்கிகள் மூலமாக கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டு பேசியதாவது:

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் ஆண்டுதோறும் ஆண்டுக்கடன் திட்டம் வெளியிடுவது வழக்கம். இதன்படி, 2024-25-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தின் அனைத்து வங்கிகளும் இணைந்து நிா்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவேண்டும். மேலும், 2024-25-ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.39,018 கோடி ஆகும்.

இதில், வேளாண்மைத் துறைக்கு ரூ,16,828 கோடியும், சிறு வணிக துறைக்கு ரூ.21,344 கோடியும், பிற முன்னுரிமை கடன்களான வீட்டுக் கடன், மரபுசாரா எரிசக்தி கடன், கல்விக் கடன்களுக்கு ரூ.396.02 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்களை பரிசீலினை செய்து மாணவா்களுக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்கவும், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் துா்கா பிரசாந்த், முதன்மை மேலாளா் பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.