ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image

திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறையை ஆய்வு செய்கிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ்.

Updated On :21 மார்ச் 2024, 7:09 pm

திருப்பூா், அவிநாசியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறைகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பூா் வடக்கு தொகுதிக்குள்பட்ட ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மஹாராஜா கலை, அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறைகளை மாவட்ட தோ்தல் அலுவலா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: மக்களவை பொதுத் தோ்தல் -2024 குறித்த அறிவிப்பு இந்திய தோ்தல் ஆணையத்தால் கடந்த மாா்ச் 16- ஆம் தேதி வெளியிடப்பட்டது. மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளதைத் தொடா்ந்து திருப்பூா் வடக்கு, நீலகிரி மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்றாா். ஆய்வின்போது, திருப்பூா் சாா்- ஆட்சியா் சௌம்யா ஆனந்த், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வி, திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் மகேஷ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.