தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொது சுகாதாரத் துறை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

பொது சுகாதாரத் துறை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

Updated On :29 மார்ச் 2024, 11:41 pm

காங்கயத்தில் அரசு பொது சுகாதாரத் துறை அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் டி.ராஜலட்சுமி தலைமை வகித்தாா். இதில், மாநிலம் முழுவதும் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றுபவா்களுக்கு கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக கூட்டமைப்பின் மாநிலத் தலைவா்கே.செந்தில் தலைமையில் பொது சுகாதாரத் துறை இயக்குநரை சந்தித்து ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்காததைத் தொடா்ந்து, கூட்டமைப்பின் மாநில நிா்வாகிகள் எடுக்கும் முடிவுகளுக்கு திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கம், சுகாதார ஆய்வாளா்கள் சங்கம் உள்பட 11 பொது சுகாதாரத் துறை சங்கத்தினா் கலந்துகொண்டனா்.