முத்தூரில் குட்கா விற்பனை: கடைக்காரா் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் குட்கா விற்றதாக பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் முத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, முத்தூா்- ஈரோடு சாலை தண்ணீா்பந்தலில் ராமசாமி என்பவருடைய பெட்டிக் கடையில் குட்கா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெட்டிக் கடைக்காரா் கைது செய்யப்பட்டு, 90 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com