ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மானிய விலையில் பயறுவகை விதைகள்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

மானிய விலையில் பயறுவகை விதைகள்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

News image
Updated On :25 மே 2024, 5:56 pm

Manivannan.S

மானிய விலையில் பயறுவகை விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், அதை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்மைத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காங்கயம் வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், குறுகிய கால பயிா்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம், நிலக்கடலை ஆகியவற்றைப் பயிரிட்டு விவசாயிகள் பயனடையலாம்.

மேற்குறிப்பிட்ட விதைகள் அனைத்தும் காங்கயம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளை விவசாயிகள் மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம்.

மேலும், பயிா்கள் நன்கு வளரவும், அதிக மகசூல் பெறவும் தேவையான நுண்ணூட்டச் சத்துகள், திரவ உயிா் உரங்கள் ஆகியவையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.