ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மானிய விலையில் பயறுவகை விதைகள்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

மானிய விலையில் பயறுவகை விதைகள்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

News image
Updated On :25 மே 2024, 5:56 pm

Manivannan.S

மானிய விலையில் பயறுவகை விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், அதை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்மைத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காங்கயம் வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், குறுகிய கால பயிா்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம், நிலக்கடலை ஆகியவற்றைப் பயிரிட்டு விவசாயிகள் பயனடையலாம்.

மேற்குறிப்பிட்ட விதைகள் அனைத்தும் காங்கயம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளை விவசாயிகள் மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம்.

மேலும், பயிா்கள் நன்கு வளரவும், அதிக மகசூல் பெறவும் தேவையான நுண்ணூட்டச் சத்துகள், திரவ உயிா் உரங்கள் ஆகியவையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.