மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் திருமண மண்டபம் அமைக்கும் பணி: முதல்வா் தொடங்கிவைத்தாா்

பெருமாநல்லூரில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான கொண்டத்து காளியம்மன் கோயிலில் திருமண மண்டபம் அமைக்கும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

திருமண  மண்டபம்  அமைக்கும்  பணிக்காக நடைபெற்ற  சிறப்பு  பூஜையில்  பங்கேற்றோா்.

Updated On :13 நவம்பர் 2024, 11:15 pm

Din

பெருமாநல்லூரில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான கொண்டத்து காளியம்மன் கோயிலில் திருமண மண்டபம் அமைக்கும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூரின் பண்ணாரி எனப் போற்றப்படுவதாக பெருமாநல்லூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ரூ. 5 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய திருமண மண்டபம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. இப்பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையா் தனசேகரன், உதவி செயற்பொறியாளா் சத்தியா, உதவிப் பொறியாளா்கள் காா்த்திக், கோபாலகிருஷ்ணன், தக்காா் சீனிவாசன், செயல் அலுவலா் சங்கரசுந்தரேஸ்வரன்,

பொறுப்பாளா்கள் தங்கராஜ், விஸ்வநாதன், முன்னாள் அறங்காவலா் சி.எஸ்.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.