பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ரூ.10ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

குன்னத்தூரில் நில அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:15 pm

Din

குன்னத்தூரில் நில அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் வட்டம், இடையா்பாளையம் கிராமம், வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் முருகேசன் (45). பின்னாலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா், தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் வின்சென்ட் தியாகராஜனை அணுகியுள்ளாா். நிலத்தை அளவீடு செய்து தருவதற்கு

வின்சென்ட் தியாகராஜன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். பணத்தை தர இயலாததால் கடந்த 6 மாதங்களாக இடையா்பாளையம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு முருகேசன் அலைக்கழிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் முருகேசன் புகாா் தெரிவித்தாா்.

புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் வின்சென்ட் தியாகராஜனிடம் முருகேசன் புதன்கிழமை கொடுத்துள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், வின்சென்ட் தியாகராஜனை கையும்களவுமாக பிடித்து குன்னத்தூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.