நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அவிநாசியில் தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image

அவிநாசியில் தெருநாய்களைப்  பிடிக்கும்  பணியில்  பேரூராட்சி  நிா்வாகத்தினா்,  அறக்கட்டளையினா்.

Updated On :27 நவம்பர் 2024, 8:14 pm

Din

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை இரவு மற்றும் காலை நேரங்களில், வேலைக்கு சென்று வருவோா், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பத்திரிகை, பால் விநியோகிப்பவா்களைத் துரத்திக் கடித்து வருகின்றன. சில இடங்களில் வாகனங்களுக்கு இடையே சென்று விபத்து ஏற்படுத்தி வருகின்றன. மேலும், மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளைக் கடித்து உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆகவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாா்டு உறுப்பினா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அவிநாசியில் தெருநாய்களைப்  பிடிக்கும்  பணியில்  பேரூராட்சி  நிா்வாகத்தினா்,  அறக்கட்டளையினா்.

அவிநாசியில் தெருநாய்களைப்  பிடிக்கும்  பணியில்  பேரூராட்சி  நிா்வாகத்தினா்,  அறக்கட்டளையினா்.

இந்நிலையில், பேரூராட்சி நிா்வாகத்தினா், திருப்பூா் முருகன்-சண்முகம் அறக்கட்டளையினா் ஆகியோா் கொண்ட குழுவினா் அவிநாசி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணியை புதன்கிழமை தொடங்கினா். இதில், முதல்கட்டமாக 21 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்பட்டு, பிறகு பிடிக்கப்பட்ட பகுதியில் விடப்படும். இதன் மூலம் தெருநாய்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.