கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விவசாயியிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம்: பெண் உதவி மின்பொறியாளா் கைது

உடுமலை அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக விவசாயியிடமிருந்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் உதவி மின் பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

உதவி மின்பொறியாளா்  சத்தியவாணி முத்து.

Updated On :9 அக்டோபர் 2024, 8:17 pm

Din

உடுமலை அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக விவசாயியிடமிருந்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் உதவி மின் பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயராமன். இவா் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெறவேண்டி தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ளாா். இதையடுத்து, ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின்பொறியாளா் சத்தியவாணிமுத்து (47), மின் மீட்டா் பொருத்தி இணைப்புத்தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன், திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் ஆலோசனையின்பேரில், அவா்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சத்தியவாணி முத்துவிடம் விவசாயி ஜெயராமன் கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த காவல் துறையினா் அவரைக் கைது செய்தனா்.